கோவையில் குடும்ப தகராறில் உடலில் டீசல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட தொழிலாளி - சிகிச்சை பலனின்றி பலி!

30-சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் குடும்ப தகராறில் உடலில் டீசல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மதுக்கரை அறிவொளி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(42). கட்டிட மேசனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கனிமொழி (29). கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் சமையல் கேஸ் காலியானது.

இதையடுத்து சரவணன் சமையல் செய்வதற்கு டீசல் வாங்கி விட்டு வருவதாக கூறி வெளியே சென்றார். வெகுநேரமாகியும் சரவணன் வீடு திரும்பாததால் கனிமொழி விறகு அடுப்பை வீட்டின் முன்பகுதியில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தார். இதையடுத்து இரவு 9:30 மணி அளவில் டீசல் வாங்கி கொண்டு சரவணன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பகுதியில் கனிமொழி விறகு வைத்து சமையல் செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் இது தனக்கு அவமானம் என்று கூறி மனைவி கனிமொழியிடம் சண்டை போட்டுள்ளார். பின்னர் டீசல் கேனுடன் வீட்டிற்குள் சென்று கதவை உட்புறமாக பூட்டிவிட்டு டீசலை உடலின் மேல் ஊற்றி கொண்டு தீ வைத்துள்ளார்.

இதை தொடர்ந்து சரவணனின் சத்தம் கேட்டு உடனே, மனைவி கனிமொழி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் சரவணன் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

அவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். 30 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சரவணன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...