கோவையில் குடும்ப தகராறில் உடலில் டீசல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட தொழிலாளி - சிகிச்சை பலனின்றி பலி!

30-சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் குடும்ப தகராறில் உடலில் டீசல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மதுக்கரை அறிவொளி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(42). கட்டிட மேசனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கனிமொழி (29). கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் சமையல் கேஸ் காலியானது.

இதையடுத்து சரவணன் சமையல் செய்வதற்கு டீசல் வாங்கி விட்டு வருவதாக கூறி வெளியே சென்றார். வெகுநேரமாகியும் சரவணன் வீடு திரும்பாததால் கனிமொழி விறகு அடுப்பை வீட்டின் முன்பகுதியில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தார். இதையடுத்து இரவு 9:30 மணி அளவில் டீசல் வாங்கி கொண்டு சரவணன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பகுதியில் கனிமொழி விறகு வைத்து சமையல் செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் இது தனக்கு அவமானம் என்று கூறி மனைவி கனிமொழியிடம் சண்டை போட்டுள்ளார். பின்னர் டீசல் கேனுடன் வீட்டிற்குள் சென்று கதவை உட்புறமாக பூட்டிவிட்டு டீசலை உடலின் மேல் ஊற்றி கொண்டு தீ வைத்துள்ளார்.

இதை தொடர்ந்து சரவணனின் சத்தம் கேட்டு உடனே, மனைவி கனிமொழி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் சரவணன் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

அவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். 30 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சரவணன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...