கோவையில் மகளிர் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து பெண் போலீசாருக்கு விடுமுறை

மகளிர் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரியும் 60 பெண் போலீசாருக்கு விடுமுறை அளித்தார்.


கோவை: மகளிர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பெண்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல கோவையிலும் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த பெண்கள் ஒன்றாகக் கூடி மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.



இதன் ஒரு பகுதியாகக் கோவை அண்ணா சிலை உள்ளிட்ட சில பகுதிகள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் பெண் போலீசாருடன் இணைந்து கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடினார்.



தொடர்ந்து போலீசாருக்கு இனிப்புகளை வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.



மேலும் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள சூழலில் வெயிலில் நின்று பணிபுரியும் போக்குவரத்து போலீசாருக்கு பழச் சாறு நீர் மோர் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

பின்னர் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரியும் 60 பெண் போலீசாருக்கு விடுமுறை அளித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர் செந்தில்குமார் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...