கோவையில் பல் மருத்துவமனையில் புகுந்து செவிலியரிடம் நகை பறிப்பு..!

கத்தியைக் காட்டி மிரட்டி செவிலியர் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் மோதிரம் உட்பட நான்கரை பவுன் தங்க நகைகளை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் பல் மருத்துவமனையில் புகுந்து செவிலியரிடம் நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சவுரிபாளையம் சாலையில் மீனா எஸ்டேட் பகுதியில் ஜென்டில் டென்டல் கேர் என்ற பெயரில் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜோபு என்பவரின் மனைவி ஆலிஸ் (46) என்பவர் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் நேற்று காலை மருத்துவமனையை திறந்து சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென மருத்துவமனையில் மருத்துவர் அறைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி ஆலிஸ் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் மோதிரம் உட்பட நான்கரை பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்து ஆலிஸ் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...