கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பிரிவில் உள்ள சிஆர்பிஎஃப் பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக வந்திருந்த சிபிஐ காவலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கோவை: கோவைக்கு பயிற்சிக்காக வந்த சிபிஐ காவலர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் சிவர்னா மாவட்டத்தைச் சேர்ந்த பி.வி. சிங் என்பவரின் மகன் அனில்குமார் (38). இவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் போலீசாக பணி புரிந்து வந்தார். மேலும் அவருக்கு ஹெட் கான்ஸ்டபிளாக பதவி உயர்வு கடந்த மாதம் கிடைத்தது.
இதையடுத்து, கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பிரிவில் உள்ள சிஆர்பிஎஃப் பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக அனில்குமார் வந்திருந்தார். நேற்று காலை அணிவகுப்பு பயிற்சியை முடித்து விட்டு தனது அறைக்கு சென்ற அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறி மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிஆர்பிஎஃப் கேம்பில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து துடியலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் சிவர்னா மாவட்டத்தைச் சேர்ந்த பி.வி. சிங் என்பவரின் மகன் அனில்குமார் (38). இவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் போலீசாக பணி புரிந்து வந்தார். மேலும் அவருக்கு ஹெட் கான்ஸ்டபிளாக பதவி உயர்வு கடந்த மாதம் கிடைத்தது.
இதையடுத்து, கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பிரிவில் உள்ள சிஆர்பிஎஃப் பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக அனில்குமார் வந்திருந்தார். நேற்று காலை அணிவகுப்பு பயிற்சியை முடித்து விட்டு தனது அறைக்கு சென்ற அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறி மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிஆர்பிஎஃப் கேம்பில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து துடியலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.