கோவை மணியகாரன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச மகளிர் தினவிழா - மாநகராட்சி மேயர் கல்பனா தலைமை தாங்கினார்..!

மேலும், சென்னையில் உலக சிலம்பம் சங்கம் மூலம் நடைபெற்ற இந்திய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் முதலிடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு.


கோவை: கோவை மணியகாரன் பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.



இதில், தலைமை தாங்கிப் பேசிய மேயர் கல்பனா ஆனந்தகுமார் கூறியதாவது:-

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று இருந்த காலம் மாறி, பேரறிஞர் அண்ணா அவர்களின் கல்வித் திட்டத்தால் படித்து முன்னேற்றம் கண்டனர்.

தலைவர் கலைஞர் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கினார். இப்போது பெண்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்ற நிலை உள்ளது.

தான் கோவை மாநகராட்சியின் முதல் மேயராக பொறுப்பேற்றுள்ளதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், மாணவிகளாகிய நீங்கள் தைரியத்துடன் வாழ வேண்டும், எந்த பிரச்சினைகள் என்றாலும், எந்த நேரம் என்றாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் நன்றாகப் படித்து ஐஏஎஸ், ஐபிஎஸ், டாக்டர், என்ஜினியர் என பல உயர்ந்த பதவிகளை அடைய வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து, மாணவிகளுக்கு நாப்கின், மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களான சானிடைசர் உள்ளிட்ட பொருட்களை மேயர், மாணவிகளுக்கு வழங்கினார்.



மேலும், சென்னையில் உலக சிலம்பம் சங்கம் மூலம் நடைபெற்ற இந்திய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் முதலிடம் பிடித்த 8ம் வகுப்பு மாணவி சபீதா, மற்றும் 3ம் இடம் பிடித்த 4ம் வகுப்பு மாணவி தாரணி ஆகியோருக்கு மேயர் வாழ்த்து தெரிவித்து பரிசுகளை வழங்கினார். மேலும் அந்த மாணவிகள் சிலம்பம் சுற்றிக் காண்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...