தமிழ்‌ நாட்டுப்புற கலைஞர்களை மேடை ஏற்றும்‌ ஈஷா! பல்வேறு மாநில மக்கள்‌ கண்டு ரசித்தனர்‌

நம்‌ தமிழ்‌ மண்ணில்‌ பிறந்த நாட்டுப்புறக் கலைகளுக்கு அங்கீகாரமும்‌ வாய்ப்பும்‌ அளிக்கும்‌ விதமாக 4 நாள்‌ கலை திருவிழாவை ஈஷா ஏற்பாடு செய்துள்ளது. இவ்விழாவை பல்வேறு மாநிலங்களிலிருந்து ஈஷாவிற்கு வருகை தரும்‌ ஏராளமான மக்கள்‌ கண்டு ரத்து வருகின்றனர்‌.


கோவை: மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின்‌ ஒரு பகுதியாக, மார்ச்‌ 5-ம்‌ தேதி முதல்‌ பல்வேறு விதமான நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்‌ ஆதியோகி முன்பு நடைபெற்று வருகின்றன.

2-ம்‌ நாளான நேற்று (மார்ச்‌ 6) திருவிழா காலங்களில்‌ ராமாயணம்‌ மற்றும்‌ மகாபாரத கதைகளை நடனம்‌ மற்றும்‌ பாடல்கள்‌ மூலம்‌ சொல்லும்‌ கட்டைக்கூத்து நடைபெற்றது.



இதில்‌ புகழ்பெற்ற பெண்‌ கட்டைக்கூத்து கலைஞர்‌ திலகவதி ஸ்ரீ கிருஷ்ணா கட்டைக்கூத்து குழுவினர்‌ பங்கேற்று பஞ்ச பூதங்கள்‌ மற்றும்‌ சிவன்‌, பார்வதி கதைகளைக் கூத்து வடிவில்‌ வெளிப்படுத்தினர்‌.



சுமார்‌ இரண்டரை மணி நேரம்‌ நடந்த இந்த கலை நிகழ்ச்சியை பல்வேறு மாநில மக்கள்‌ கண்டு களித்தனர்‌. பெரும்பாலும்‌ ஆண்கள்‌ மட்டும்‌ நிகழ்த்தும்‌ கட்டைக்கூத்தை சிறப்பாக நிகழ்த்துவதும்‌, மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதிலும்‌ திலகவது முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது.



மார்ச்‌ 5- ம்‌ தேது தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள்‌ சங்கத்தைச்‌ சேர்ந்த கலைஞர்களின்‌ கலை நிகழ்ச்சிகள்‌ நடைபெற்றன. இதில்‌ பிரபல கிராமிய இசை பாடகி ரீட்டா அந்தோணிதாசன்‌ நாட்டுப்புறப் பாடல்களை பாடி பார்வையாளர்களின்‌ கைத்தட்டல்களைப் பெற்றார்‌. அத்துடன்‌, அக்குழுவினர்‌ கரகாட்டமும்‌, காவம்‌ ஆட்டமும்‌ ஆம மக்களை மகிழ்வித்தனர்‌. மேலும்‌, ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள்‌ தேவாரப் பாடல்களை பாடி மக்களை பக்தியில்‌ ஆழ்த்தினர்‌.

மார்ச்‌ 7-ம்‌ தேதி கஜஹஸ்தானில்‌ இருக்கும்‌ இந்திய பாரம்பரிய நடனம்‌ மற்றும்‌ யோகா மையத்தினரின்‌ நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியும்‌, பரத நாட்டியமும்‌ நடைபெற உள்ளது. மார்ச்‌ 8-ம்‌ தேதி ஈஷாவை சுற்றியுள்ள மலைவாழ்‌ இராமங்களில்‌ வாழும்‌ இருளர்‌ பழங்கும மக்களின்‌ பாரம்பரிய இசை மற்றும்‌ நடன நிகழ்ச்சியும்‌ நடைபெற உள்ளது.

தினமும்‌ இரவு 7 மணிக்கு தொடங்கும்‌ இக்கலை நிகழ்ச்சிகள்‌ இரவு 10 மணி வரை நடைபெறும்‌. இடையில்‌ ஆதியோகி திவ்ய தரிசனமும்‌ நடைபெறும்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...