கோவையில் கோவில் உண்டியலை திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 2 சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.


கோவை: கோவையில் கோவில் உண்டியலை திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை துடியலூர் அடுத்து நல்லம்பாளையம் பகுதியில் கணேச வடிவாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூசாரி பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டி வீட்டுக்கு சென்றார்.

அப்போது அங்கு வந்த 3 பேர் கோவிலிலிருந்த உண்டியலை பெயர்த்து எடுத்து அவர்கள் வந்த பைக்கில் வைத்து தப்பிச் செல்ல முயற்சி செய்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த ரோந்து போலீசார் அவர்களை பார்த்து நிற்குமாறு கூறினர்.

ஆனால் அவர்கள் போலீசாரை கண்டதும் பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்கள் 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேரன்மாநகர் பகுதி மற்றும் விலங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என்பதும், மற்றொருவர் அவர்களது நண்பர் சண்முகம் (19) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 2 சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். சண்முகத்தை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...