விபத்தை ஏற்படுத்திய ஈரோடு மூலம்பாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேஷ் என்பவரின் மனைவி ரங்கம்மாள் வயது (80). இவர் நேற்று கிணத்துக்கடவு பகுதிக்கு பொருட்கள் வாங்க கடைக்கு வந்தவர், கோவை சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ரங்கம்மாள் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த ரங்கம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ரங்கம்மாள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஈரோடு மூலம்பாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேஷ் என்பவரின் மனைவி ரங்கம்மாள் வயது (80). இவர் நேற்று கிணத்துக்கடவு பகுதிக்கு பொருட்கள் வாங்க கடைக்கு வந்தவர், கோவை சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ரங்கம்மாள் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த ரங்கம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ரங்கம்மாள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஈரோடு மூலம்பாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.