கோவை கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பரிதாபமாக பலி..!

விபத்தை ஏற்படுத்திய ஈரோடு மூலம்பாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேஷ் என்பவரின் மனைவி ரங்கம்மாள் வயது (80). இவர் நேற்று கிணத்துக்கடவு பகுதிக்கு பொருட்கள் வாங்க கடைக்கு வந்தவர், கோவை சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ரங்கம்மாள் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த ரங்கம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ரங்கம்மாள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஈரோடு மூலம்பாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...