திருப்பூரில் ரூ.18.50-லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த செய்தித்துறை அமைச்சர்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.18.50-லட்சம் மதிப்பீட்டில் வெள்ளகோவில் நகராட்சி, உப்புபாளையம் பகுதியில் உள்ள குளத்தைத் தூர்வாரும் பணியைத் துவக்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூரில் ரூ.18.50-லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர்வாரும் பணியை செய்தித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.



திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் ம.செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத் தலைமையில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சி, உப்புபாளையம் பகுதியில் உள்ள குளத்தைத் தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்.



அந்த வகையில், நகராட்சி நிர்வாக மண்டலங்களில் தலா ஒரு நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் 2021-22 செயல்படுத்தப்படும் என அறிவித்து, திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டலத்தில், வெள்ளகோவில் நகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.18.50-லட்சம் மதிப்பீட்டில் வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட உப்புப்பாளையம் பகுதியில் உள்ள குளத்தினை சீரமைத்தல் பணி நடைபெறவுள்ளது.



இத்திட்டத்தில் 60% தொகை பணியாளர்களின் ஊதியமாகவும் 40% தொகை பொருட்களின் விலை விகிதமாகவும் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை மேற்கொள்ள நகராட்சி பகுதிகளில் பொதுமக்களிடம் நேரில் சென்று இத்திட்டத்தினை விளக்கமாகத் தெரிவித்து பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு அடையாள வழங்கப்பட்டுள்ளது.

பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஊதியம் ரூ.342.00 என நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளது. சீரமைப்பது மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தேவையும், விவசாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் எம்.கனியரசி, நகராட்சி துணைத் தலைவர் செயற்பொறியாளர் பாலச்சந்திரன், நகராட்சி நகராட்சி உடனிருந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...