கோவை சிங்காநல்லூர் அருகே குடும்பத் தகராறில் கணவரை வெட்டி கொலை செய்த மனைவி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே குடும்பத் தகராறில் கணவரை வெட்டி கொலை செய்த மனைவி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (55) தச்சு தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (50). இந்நிலையில் நாராயணசாமி வீட்டில் இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிகிறது. அப்போது, நாராயணசாமி மற்றும் அவரது மனைவி இடையே குடும்ப விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நிகழ்ச்சி முடிந்து வீட்டில் இருவரும் தனியாக இருந்தபோது, மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, நாராயணசாமி, ராஜேஸ்வரியை தாக்கியுள்ளார். இதனால்,ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி வீட்டில் இருந்த கத்தியால் நாராயணசாமியை குத்தியுள்ளார். இதில், படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து ராஜேஸ்வரி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்து, நடந்ததை தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (55) தச்சு தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (50). இந்நிலையில் நாராயணசாமி வீட்டில் இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிகிறது. அப்போது, நாராயணசாமி மற்றும் அவரது மனைவி இடையே குடும்ப விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நிகழ்ச்சி முடிந்து வீட்டில் இருவரும் தனியாக இருந்தபோது, மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, நாராயணசாமி, ராஜேஸ்வரியை தாக்கியுள்ளார். இதனால்,ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி வீட்டில் இருந்த கத்தியால் நாராயணசாமியை குத்தியுள்ளார். இதில், படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து ராஜேஸ்வரி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்து, நடந்ததை தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.