வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் - கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

தமிழக அரசு சார்பில் கலைஞரின் "வரும் முன் காப்போம்" இரண்டாவது மருத்துவ முகாமை கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், கோவை மாநகராட்சி, மேயர் கல்பனா ஆனந்தகுமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.


கோவை: தமிழக அரசின் "வரும் முன் காப்போம்" இரண்டாவது மருத்துவ முகாமை காளப்பட்டியில்கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

தமிழக அரசு சார்பில் கலைஞரின் "வரும் முன் காப்போம்" இரண்டாவது மருத்துவ முகாமை கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், கோவை மாநகராட்சி, மேயர் கல்பனா ஆனந்தகுமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.



இதைத்தொடர்ந்து, முகாமில் அவர் பேசுகையில், தமிழக அரசு மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தி வருவதாகவும், ஏற்கனவே 2 மருத்துவ முகாம்கள் நடைபெற்ற நிலையில், அதில் 1040 பேர் பயனடைந்ததாகவும், 1359 பரிசோதனைகள் முகாம்களில் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார்.



மேலும், இந்த முகாமில் பொது மருத்துவம், குழந்தைகளுக்கான சிறப்பு நலம், எலும்பு முறிவு சிகிச்சைகள், பெண்கள் மருத்துவம் உள்ளிட்ட 10 சிறப்பு மருத்துவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில்,25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்நல மையம், 63 இடங்கள் என ரூ15.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார். தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை மேயர், கல்பனா வழங்கினார்.



இந்த முகாமில், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, நகர் நல அலுவலர் ஜெகதீசன்,8 வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், மாமன்ற உறுப்பினர் பொன்னுச்சாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ரகுபதி, நேருநகர் தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...