கோவை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மனநலம் மீளாய்வு அலுவலக கட்டிடம் - மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்..!

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மனநல காப்பகங்கள் மறுவாழ்வு மையங்களின் செயல்பாடுகள் இம்மன்றம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.


கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மனநலம் மீளாய்வு அலுவலக கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் திறந்து வைத்தார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனை பாதுகாப்பதற்காக தமிழகத்தில் மன நல மன்றங்கள் அமைக்க கடந்த ஆண்டு அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில், திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் உள்ளடக்கிய மன நல மன்றம் அமைக்கப்பட்டது.

இதன் தலைவராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஜே. பி. ராஜ் நியமிக்கப்பட்டார். கோவை அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த மனநல மீளாய்வு மன்றத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மனநல மீளாய்வு மன்றத்தின் புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீது நடத்தப்படும் கொடுமை குறித்து மனநல மீளாய்வு மன்றத்தில் புகார் அளிக்கும் பட்சத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்படும். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மனநல காப்பகங்கள் மறுவாழ்வு மையங்களின் செயல்பாடுகள் இம்மன்றம் மூலம் கண்காணிக்கப்படுகிறது, என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மனநல மீளாய்வு மன்ற தலைவர் ஜெயராஜ், கூடுதல் மாவட்ட நீதிபதி ரவி, மேற்கு மண்டல காவல்துறைத் துணைத் தலைவர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...