கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவிக்கு பதிலாக துணைத் தலைவர் பதவி கொடுத்து காங்கிரசை சமாதானப்படுத்திய தி.மு.க..!

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாரும் போட்டியிடாமல் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


கோவை: கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவிக்கு பதிலாக துணைத் தலைவர் பதவி கொடுத்து காங்கிரசை தி.மு.க சமாதானப்படுத்தியுள்ளது.

கருமத்தம்பட்டி நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் திமுக 19 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், என திமுக கூட்டணி 21 வார்டுகளை கைப்பற்றியது. அதிமுக 3 பேர், சுயேட்சை 3 பேர் என வெற்றி பெற்றனர்.

திமுக கூட்டணியில் கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. நேற்று மறைமுக தேர்தல் நடந்தது. காங்கிரஸ் சார்பில் பாலசுப்பிரமணியம் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த நித்தியா ஜி மனோகரன் என்பவர் போட்டியிட்டார். இதில் தி.மு.க வேட்பாளர் நித்தியா 22 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காங்கிரஸை சேர்ந்த பாலசுப்ரமணியம் 5 வாக்குகள் பெற்றார். திமுகவினரின் இந்த செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, மாலை நடந்த துணை தலைவருக்கான தேர்தலில் 6வது வார்டு பகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட காங்கிரசை சேர்ந்த முன்னாள் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் யுவராஜ் என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாரும் போட்டியிடாமல் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைவர் பதவியில் ஏமாற்றமடைந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சமரச படுத்துவதற்காக துணைத் தலைவர் பதவியை திமுக வழங்கியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...