திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாரும் போட்டியிடாமல் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கோவை: கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவிக்கு பதிலாக துணைத் தலைவர் பதவி கொடுத்து காங்கிரசை தி.மு.க சமாதானப்படுத்தியுள்ளது.
கருமத்தம்பட்டி நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் திமுக 19 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், என திமுக கூட்டணி 21 வார்டுகளை கைப்பற்றியது. அதிமுக 3 பேர், சுயேட்சை 3 பேர் என வெற்றி பெற்றனர்.
திமுக கூட்டணியில் கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. நேற்று மறைமுக தேர்தல் நடந்தது. காங்கிரஸ் சார்பில் பாலசுப்பிரமணியம் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த நித்தியா ஜி மனோகரன் என்பவர் போட்டியிட்டார். இதில் தி.மு.க வேட்பாளர் நித்தியா 22 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸை சேர்ந்த பாலசுப்ரமணியம் 5 வாக்குகள் பெற்றார். திமுகவினரின் இந்த செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, மாலை நடந்த துணை தலைவருக்கான தேர்தலில் 6வது வார்டு பகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட காங்கிரசை சேர்ந்த முன்னாள் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் யுவராஜ் என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாரும் போட்டியிடாமல் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவர் பதவியில் ஏமாற்றமடைந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சமரச படுத்துவதற்காக துணைத் தலைவர் பதவியை திமுக வழங்கியுள்ளது.
கருமத்தம்பட்டி நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் திமுக 19 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், என திமுக கூட்டணி 21 வார்டுகளை கைப்பற்றியது. அதிமுக 3 பேர், சுயேட்சை 3 பேர் என வெற்றி பெற்றனர்.
திமுக கூட்டணியில் கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. நேற்று மறைமுக தேர்தல் நடந்தது. காங்கிரஸ் சார்பில் பாலசுப்பிரமணியம் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த நித்தியா ஜி மனோகரன் என்பவர் போட்டியிட்டார். இதில் தி.மு.க வேட்பாளர் நித்தியா 22 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸை சேர்ந்த பாலசுப்ரமணியம் 5 வாக்குகள் பெற்றார். திமுகவினரின் இந்த செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, மாலை நடந்த துணை தலைவருக்கான தேர்தலில் 6வது வார்டு பகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட காங்கிரசை சேர்ந்த முன்னாள் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் யுவராஜ் என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாரும் போட்டியிடாமல் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவர் பதவியில் ஏமாற்றமடைந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சமரச படுத்துவதற்காக துணைத் தலைவர் பதவியை திமுக வழங்கியுள்ளது.