மேலும், வாக்குச் சீட்டை கிழித்தெறிந்த திமுக உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலர் புகார்.
கோவை: கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், திருமலையம்பாளையம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. அதில் திமுகவைச் சேர்ந்த 8 கவுன்சிலர்களும், அதிமுகவைச் சேர்ந்த 7 கவுன்சிலர்களும் உள்ளனர். இதில் நேற்று காலை நடந்த தலைவருக்கான தேர்தலில் திமுக கவுன்சிலர் கவிதா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, பிற்பகலில் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் கோகிலா மற்றும் அதிமுக சார்பில் கலைவாணி போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் திமுக கவுன்சிலர் ஒருவர் வாக்குச் சீட்டில் சரியாக டிக் செய்யாததால் அந்த வாக்கு செல்லாது என தேர்தல் நடத்தும் அலுவலர் கல்பனா அறிவித்தார். இதனால் திமுக மற்றும் அதிமுக தலா 7 வாக்குகளை பெற்றனர்.
இதனால் குலுக்கல் முறையில் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் கல்பனா அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, திமுக கவுன்சிலர் ஒருவர் செல்லாத வாக்குச் சீட்டை அதிகாரியிடமிருந்து வாங்கிச் சென்று கிழித்து வீசினார். இதனால் அங்கு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். மேலும் வாக்குச் சீட்டை கிழித்து எறிந்து ரகளை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கே.ஜி சாவடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், திருமலையம்பாளையம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. அதில் திமுகவைச் சேர்ந்த 8 கவுன்சிலர்களும், அதிமுகவைச் சேர்ந்த 7 கவுன்சிலர்களும் உள்ளனர். இதில் நேற்று காலை நடந்த தலைவருக்கான தேர்தலில் திமுக கவுன்சிலர் கவிதா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, பிற்பகலில் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் கோகிலா மற்றும் அதிமுக சார்பில் கலைவாணி போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் திமுக கவுன்சிலர் ஒருவர் வாக்குச் சீட்டில் சரியாக டிக் செய்யாததால் அந்த வாக்கு செல்லாது என தேர்தல் நடத்தும் அலுவலர் கல்பனா அறிவித்தார். இதனால் திமுக மற்றும் அதிமுக தலா 7 வாக்குகளை பெற்றனர்.
இதனால் குலுக்கல் முறையில் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் கல்பனா அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, திமுக கவுன்சிலர் ஒருவர் செல்லாத வாக்குச் சீட்டை அதிகாரியிடமிருந்து வாங்கிச் சென்று கிழித்து வீசினார். இதனால் அங்கு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். மேலும் வாக்குச் சீட்டை கிழித்து எறிந்து ரகளை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கே.ஜி சாவடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.