கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து - 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீ அணைக்கப்பட்டது..!!

குப்பைக் கிடங்கில் இரண்டு பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதால் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.



கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கின் இரண்டு பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

குப்பைகளை தரம் பிரித்து அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரமாகும் நிலையில் இங்கு அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் கடந்த பிப்ரவரி 5ம் தேதியிலிருந்து நிரந்தரமாக தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் குப்பைக் கிடங்கின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது அங்கிருந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென வேகமாக பரவியது.

இதனிடையே, குப்பைக் கிடங்கின் மற்றொரு பகுதியில் தீ பிடித்ததால், தெற்கு தீயணைப்பு நிலையம், மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த 3 வாகனம் மூலம் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் புகை மூட்டமாகக் காணப்பட்டது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...