இன்று நடந்த நகராட்சி தலைவர் தேர்தலில் நூர்ஜகான் போட்டியின்றி வெற்றி பெற்று தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதேபோல் பிற்பகல் நடந்த துணைத் தலைவர் தேர்தலில் ரமேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கோவை: புதிதாக விரிவாக்கம் செய்ய மதுக்கரை நகராட்சியின் முதல் தலைவராக நூர்ஜகான் மற்றும் துணைத் தலைவராக ரமேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மதுக்கரை பேரூராட்சி கடந்த ஆண்டு, 27-வார்டுகளுடன் நகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 24-இடங்களிலும், அதிமுக 3-இடங்களிலும் வெற்றி பெற்று நகராட்சி உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. ஏற்கனவே திமுக தலைமை மதுக்கரை நகராட்சி 17-வது வார்டு உறுப்பினர் நூர்ஜஹானை தலைவர் வேட்பாளராகவும், 7-வது வார்டு உறுப்பினர் ரமேஷ் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது.
இதனால், இன்று நடந்த நகராட்சி தலைவர் தேர்தலில் நூர்ஜகான் போட்டியின்றி வெற்றி பெற்று தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதேபோல் பிற்பகல் நடந்த துணைத் தலைவர் தேர்தலில் ரமேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மதுக்கரை நகராட்சியில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுக வார்டு உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. மதுக்கரை நகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட்டு நடைபெற்ற முதல் தேர்தலில், முதல் தலைவராகப் பெண் வார்டு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுக்கரை பேரூராட்சி கடந்த ஆண்டு, 27-வார்டுகளுடன் நகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 24-இடங்களிலும், அதிமுக 3-இடங்களிலும் வெற்றி பெற்று நகராட்சி உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. ஏற்கனவே திமுக தலைமை மதுக்கரை நகராட்சி 17-வது வார்டு உறுப்பினர் நூர்ஜஹானை தலைவர் வேட்பாளராகவும், 7-வது வார்டு உறுப்பினர் ரமேஷ் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது.
இதனால், இன்று நடந்த நகராட்சி தலைவர் தேர்தலில் நூர்ஜகான் போட்டியின்றி வெற்றி பெற்று தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதேபோல் பிற்பகல் நடந்த துணைத் தலைவர் தேர்தலில் ரமேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மதுக்கரை நகராட்சியில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுக வார்டு உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. மதுக்கரை நகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட்டு நடைபெற்ற முதல் தேர்தலில், முதல் தலைவராகப் பெண் வார்டு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.