வால்பாறை நகராட்சி தேர்தலில் 21 வார்டுகளில் திமுக 19 வார்டுகளை கைப்பற்றிய நிலையில், திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலால் தேர்தல் ஒத்திவைப்பு.
கோவை: கோவை வால்பாறை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி தேர்தலில் 21 வார்டுகளில் திமுக 19 வார்டுகளை கைப்பற்றியது.
இதனையடுத்து, திமுக தலைமையின் சார்பாக 10வது வார்டில் வெற்றி பெற்ற காமாட்சி கணேசன் நகராட்சி தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், நகராட்சியின் தலைவருக்கான மறைமுக தேர்தலில், அவருக்கு எதிராக 14 வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற அழகு சுந்தரவள்ளி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, இரு தரப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினரையும் கலைந்து போகுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தினர்.

பின்னர், கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி நகர்மன்றத் தலைவர் தேர்தல் நடைமுறைகள் இரு தரப்பு ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேற்படி, தேர்தல் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மறு தேதி அறிவிக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி தேர்தலில் 21 வார்டுகளில் திமுக 19 வார்டுகளை கைப்பற்றியது.
இதனையடுத்து, திமுக தலைமையின் சார்பாக 10வது வார்டில் வெற்றி பெற்ற காமாட்சி கணேசன் நகராட்சி தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், நகராட்சியின் தலைவருக்கான மறைமுக தேர்தலில், அவருக்கு எதிராக 14 வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற அழகு சுந்தரவள்ளி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, இரு தரப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினரையும் கலைந்து போகுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
பின்னர், கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி நகர்மன்றத் தலைவர் தேர்தல் நடைமுறைகள் இரு தரப்பு ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேற்படி, தேர்தல் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மறு தேதி அறிவிக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.