கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுக - அதிமுக வினரிடையே மோதல்; மறு மறைமுக தேர்தல் நடத்த வலியுறுத்தி எஸ்.பி.வேலுமணி மனு..!

வெள்ளலூர் பேரூராட்சியில் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் இல்லையெனில், நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவித்தார்.



கோவை: கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுக - அதிமுக வினரிடையே ஏற்பட்ட மோதலால் மறு மறைமுக தேர்தல் நடத்த வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனுத் தாக்கல் செய்தார்.

கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் இன்று காலை திமுக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அப்பேரூராட்சியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.



இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெள்ளலூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் 8 பேருடன் கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோரிடம் மனு அளித்தார்.



இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்:-



கோவையில் வெளியூர் நபர்களை வைத்து திமுகவினர் வன்முறை நடத்துகின்றனர் என தெரிவித்தார். முறைகேடான வகையில் அதிமுகவின் வெற்றியை பறித்தார்கள் எனவும் கூறினார்.

வெள்ளலூர் பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலர்களை கத்தி, கம்புடன் வந்து தாக்கி இருக்கின்றனர் எனவும், காரை சேதப்படுத்தி இருக்கின்றனர் எனவும் குற்றம்சாட்டிய அவர், இந்த தேர்தல் வன்முறைகள் கோவைக்கு புதுமையாக இருக்கின்றது என தெரிவித்தார்.

எனவே, வெள்ளலுர் பேரூராட்சி தேர்தலைத் தள்ளி வைத்து இருக்கின்றனர் எனவும், இது நியாயமே இல்லை எனவும் கூறிய அவர், வெள்ளலூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் 8 பேரையும் ஆட்சியர் முன்னிலையில் நிறுத்தி இருக்கின்றோம்.

அதிமுகவினரை தாக்கிவிட்டு திமுகவினர் காவல் துறையில் பொய் புகார் கொடுத்து இருக்கின்றனர். அடித்துவிட்டு அவர்களே பொய் புகார் கொடுத்து இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

வெள்ளலூர் பேரூராட்சியில் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...