கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி செங்கோல் கொடுத்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.
கோவை: கோவை மாநகராட்சி பள்ளிக்கு கழிப்பிடம் கட்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார் முதல் கையெழுத்திட்டார்.
மேயர் பதவிக்கு கடுமையான போட்டி இருந்த சூழ்நிலையில் கோவை மாநகராட்சியில் 19வது வார்டில் உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்பனாவிற்கு மேயர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள கல்பனா கடந்த 10 ஆண்டுகளாக திமுக உறுப்பினராக உள்ளார். மேலும், கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் பகுதி பொறுப்புக் குழு நிர்வாகியாக உள்ளார். மூன்று தலைமுறை திமுக குடும்பம் என்பதாலும், கட்சி பணிகளில் தொடர்ந்து பங்கேற்றதால் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவிற்கு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செங்கோல் கொடுத்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பொறுப்பேற்றவுடன், கழிப்பிடம் இல்லாத மாநகராட்சி பள்ளியில், கழிப்பிடம் கட்டுவதற்கான முதல் அனுமதி ஒப்பந்தத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் கையெழுத்திட்டார்.
மேயர் பதவிக்கு கடுமையான போட்டி இருந்த சூழ்நிலையில் கோவை மாநகராட்சியில் 19வது வார்டில் உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்பனாவிற்கு மேயர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள கல்பனா கடந்த 10 ஆண்டுகளாக திமுக உறுப்பினராக உள்ளார். மேலும், கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் பகுதி பொறுப்புக் குழு நிர்வாகியாக உள்ளார். மூன்று தலைமுறை திமுக குடும்பம் என்பதாலும், கட்சி பணிகளில் தொடர்ந்து பங்கேற்றதால் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவிற்கு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செங்கோல் கொடுத்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பொறுப்பேற்றவுடன், கழிப்பிடம் இல்லாத மாநகராட்சி பள்ளியில், கழிப்பிடம் கட்டுவதற்கான முதல் அனுமதி ஒப்பந்தத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் கையெழுத்திட்டார்.