இரண்டாவது நாளாக இந்த போராட்டமானது நடைபெற்று வரும் நிலையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தப்படித்து அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பி.எஸ்.ஜி கல்லூரியில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரியில் 70-ஆசிரியர் பணியிடங்கள் 42-அலுவலக பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆசிரியர் பணி பழுவை சட்டப்படி கடைப்பிடிக்க வேண்டும், பணியிடத்தைக் குறைக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும், மாணவர்களிடம் SEED FUND-வசூல் செய்வதைத் தவிர்க்க வேண்டும், கல்லூரி முதல்வர் ஆசிரியர்களையும் மாணவர்களைச் சந்திக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இரண்டாவது நாளாக இந்த போராட்டமானது நடைபெற்று வரும் நிலையில் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தப்படித்து அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் அரசு உதவி பெறும் கல்லூரியைத் தனியார் கல்லூரியாக மாற்றக் கல்லூரி நிர்வாகம் முயல்வதாகச் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். உடனடியாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி ஆசிரியர்களை பணியமர்த்தி மாணவர்களின் நலன் காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.