கோவை மாநகராட்சியில் வருகிற 4-ம் தேதி மேயர் தேர்தல்

கோவை மாநகராட்சியில் வருகிற 4-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலையே துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும், மாமன்ற கட்டிடமான விக்டோரியா ஹாலில் நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் வருகிற 4-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெற உள்ளது.

கோவை மாநகராட்சியில் 100-வார்டுகளில் தேர்வு பெற்ற கவுன்சிலர்கள் இன்று மாமன்ற கூட்ட அரங்கில் பதவியேற்றுக் கொண்டனர். கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும் முன்பாக அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் என்னுடைய வார்டு பதவியேற்பு, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்பதை நன்கு அறிவேன் எனக்கூறிவிட்டுப் பதவியேற்றனர். பதவியேற்பு விழா நடைபெற்ற மாமன்ற கூட்ட அரங்கில் உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

பதவியேற்பு விழாவை மக்கள் பார்க்கும் வகையில் மாநகராட்சி வளாகத்தில் எல்.இ.டி திரை அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவை மாநகராட்சி யுடியூப் பக்கத்தில் பதவி பிரமாணம் நேரலை செய்யப்பட்டது.

இன்று பதவியேற்ற 100-கவுன்சிலர்களில் 93-பேர் மாமன்றத்திற்கு புதியவர்கள். 7-பேர் மட்டுமே ஏற்கனவே கவுன்சிலராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதும், 100-கவுன்சிலர்களில் 55- பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

100-வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியில் திமுக கூட்டணி 96-இடங்களை பிடித்து அருதி பெரும்பான்மையுடன் இருக்கின்றது. திமுக உறுப்பினர்கள் 73-பேர், காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் 9-பேர், சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் 4-பேர், சிபிஐ மாமன்ற உறுப்பினர்கள் 4-பேர், மதிமுக மாமன்ற உறுப்பினர்கள் 3-பேர், 1-மனித நேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர், 2-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர்கள், அதிமுகவும் 3-மாமன்ற உறுப்பினர்கள், எஸ்.டி.பி.ஐ கட்சியின் சர்பில் 1-சுயேச்சை உறுப்பினர் என 100-உறுப்பினர்களும் இன்று பதவியேற்றனர்.

இதை தொடர்ந்து வருகிற 4-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலையே துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும், மாமன்ற கட்டிடமான விக்டோரியா ஹாலில் நடைபெற உள்ளது. கடந்த 1892ம் ஆண்டு கட்டப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த விக்டோரியா ஹால் அரங்கில் வருகிற 5-ஆண்டுகளுக்கான மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...