கோவையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் இயற்றிய பாடல் வெளியீடு..!

இந்த பாடலின் வெளியீட்டு விழா கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.



கோவை: கோவையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் இயற்றிய பாடல் வெளியீட்டு விழா கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.

பார்வை மாற்றுத்திறனாளிகளான ஜிகுனா சுந்தர் (பாடகர்), சபரீஷ் சச்சிதானந்தம் (இசையமைப்பாளர்), உடுமலை பார்த்திபன் (பாடலாசிரியர்) ஆகியோர் இணைந்து "விழிகள் இல்லாத நேரம்" என்ற பாடலை இயற்றியுள்ளனர்.



இந்த பாடலானது லித்தி (Lithi) என்ற யூடியூப்-ல் வெளியாகியுள்ளது. இந்த பாடலின் வெளியீட்டு விழா கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. பார்வையற்றோர் நலசங்க தலைவர் சதாசிவம் முன்னிலையில் பாடல் வெளியிடப்பட்டது.

பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மையமாகக் கொண்டு இந்த பாடலானது உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய பாடல் குழுவினர், இது தங்களின் முதல் படைப்பு என்றும் இனி வரும் காலங்களில் காதல், கோபம், ஆத்திரம், வெறுமை ஆகியவற்றைக் கொண்டு பாடல்கள் இயற்ற இருப்பதாகவும், சினிமா துறையில் வர ஆசைகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...