இதுகுறித்து ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை ஆர்.எஸ் புரம், பகுதியில் வசிக்கக்கூடிய பைனான்சியர் வீட்டில் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை வீரகேரளம் அருகே உள்ள பொங்காளி ஊரை சேர்ந்தவர் நரேஷ் குமார் (36), பைனான்சியரான இவருக்கு சொந்தமாக வீடு ஆர்.எஸ்.புரம் ராமச்சந்திரா ரோட்டில் உள்ளது.
இந்நிலையில், நரேஷ்குமார் அடிக்கடி அங்கு சென்று தங்கி வந்தார். அந்த வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இதையடுத்து, வீட்டிற்குச் சென்ற நரேஷ் குமார் வீட்டின் பீரோவிலிருந்த பணம் கொள்ளை போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து ஆர்.எஸ் புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வீரகேரளம் அருகே உள்ள பொங்காளி ஊரை சேர்ந்தவர் நரேஷ் குமார் (36), பைனான்சியரான இவருக்கு சொந்தமாக வீடு ஆர்.எஸ்.புரம் ராமச்சந்திரா ரோட்டில் உள்ளது.
இந்நிலையில், நரேஷ்குமார் அடிக்கடி அங்கு சென்று தங்கி வந்தார். அந்த வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இதையடுத்து, வீட்டிற்குச் சென்ற நரேஷ் குமார் வீட்டின் பீரோவிலிருந்த பணம் கொள்ளை போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து ஆர்.எஸ் புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.