கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பைனான்சியர் வீட்டில் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை..!

இதுகுறித்து ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ஆர்.எஸ் புரம், பகுதியில் வசிக்கக்கூடிய பைனான்சியர் வீட்டில் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை வீரகேரளம் அருகே உள்ள பொங்காளி ஊரை சேர்ந்தவர் நரேஷ் குமார் (36), பைனான்சியரான இவருக்கு சொந்தமாக வீடு ஆர்.எஸ்.புரம் ராமச்சந்திரா ரோட்டில் உள்ளது.

இந்நிலையில், நரேஷ்குமார் அடிக்கடி அங்கு சென்று தங்கி வந்தார். அந்த வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, வீட்டிற்குச் சென்ற நரேஷ் குமார் வீட்டின் பீரோவிலிருந்த பணம் கொள்ளை போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து ஆர்.எஸ் புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...