கோத்தகிரி அருகே உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

பல லட்சம் மதிப்பிலான தேயிலைத் தூள் மற்றும் தேயிலை தொழிற்சாலை உபகரணங்கள் எரிந்த சம்பவம், கப்பட்டி கிராம பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.

கோத்தகிரியிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கப்பட்டி கிராமம். இங்கு தனியார் ஆரஞ்சு வேலி தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் இரவு நேர தேயிலை அரைக்கும் பணியில் நேற்று இரவு ஆறு பேர் பணிபுரிந்து வந்துள்ளனர்.



இந்நிலையில், நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், கணிமைக்கும் வேளையில் மளமளவெனத் தொழிற்சாலை முழுவதும் தீ பரவ தொடங்கியது உடனே இரவு நேர பணியில் இருந்த பணியாளர்கள் தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீ அணைக்கப்பட்டது. ஆனால், அதற்குள் தேயிலை தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இது தொடர்பாகத் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொழிற்சாலையில் தேயிலை தூள் தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் அடுப்பிலிருந்து தீ பரவியதா? அல்லது மின்கசிவு காரணமாக இருக்குமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

அதிர்ஷ்டவசமாகக் குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்கள் பணி செய்ததால் அனைவரும் எவ்வித பாதிப்பும் இன்றி தொழிற்சாலையை விட்டு உடனே வெளியேறி விட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...