கோவையில் களைக்கட்ட தயாராகும்‌ ஈஷா மஹாசிவராத்திரி..!

இவ்விழா, பல்வேறு இசைக்கலைஞர்களுடன் மார்ச்‌ 1ம்‌ தேதி மாலை 6 மணி முதல் மறுநாள்‌ காலை 6 மணி வரை நடைபெற உள்ளது.


கோவை: கோவையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா களைக்கட்டத் துவங்கியுள்ளது.

இந்த விழாவிற்கான இசைக் கலைஞர்களின்‌ விவரங்கள்‌ இதோ:-

உலகளவில்‌ புகழ்பெற்ற ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டும்‌ பல்வேறு மாநில கலைஞர்களுடன்‌ களைக்கட்ட தயாராகிவிட்டது.

பல பிரபல தமிழ்ப்‌ படங்களில்‌ சிறந்த பாடல்களைப் பாடிய பின்னணி பாடகர்‌ ஷான்‌ ரோல்டன்‌ இந்தாண்டு ஈஷா மஹாசிவராத்திரி விழாவில்‌ பாட உள்ளார்‌. திரைப் பாடல்கள்‌ மட்டுமின்றி கர்நாடக இசை சங்கீதத்திலும்‌ அவர்‌ கரைகண்டவர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு தன்‌ கம்பீர குரலால்‌ சிவனைப் போற்றி பாடல்கள்‌ பாடி மக்களைக் கவர்ந்த தெலுங்கு பாடகி மங்கலி இந்தாண்டும்‌ இன்னிசையை வழங்க உள்ளார்‌. மேலும்‌, பாலிவுட்‌ திரை உலகில்‌ பல பக்தி பாடல்களை பாடியுள்ள பின்னணி பாடகர்‌ மாஸ்டர்‌ சலீமும்‌ இவ்விழாவில்‌ பாட உள்ளார்‌. அவர்‌ பஞ்சாபி மொழியிலும்‌, சூஃபி இசையிலும்‌ இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்‌.



அசாமின்‌ புகழ்பெற்ற பின்னணி பாடகர்‌ பப்பான்‌ (10) ஹிமாச்சல்‌ பிரதேசத்தைச்‌ சேர்ந்த பாடகர்‌ ஹன்ஸ்ராஜ்‌ ரகுவன்சுயும்‌ தங்களின்‌ இசை அர்ப்பணிப்பை வழங்க உள்ளார்‌. இதுதவிர, ஈஷாவின்‌ சொந்த இசைக் குழுவான 'சவுண்ட்ஸ்‌ ஆஃப்‌ ஈஷா' வும்‌, ஈஷா சம்ஸ்‌கிருதி குழுவினரும்‌ தங்கள்‌ இசை மற்றும்‌ நடன நிகழ்ச்சிகளை அர்ப்பணிக்க உள்ளனர்‌.

இவ்வாறு, தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப்‌, இமாச்சல்‌ பிரதேஷ்‌, அசாம்‌ என பல மாநில கலைஞர்களுடன்‌ ஈஷா மஹாசிவராத்திரி விழா களைக்கட்ட உள்ளது.

இவ்விழா, கோவை ஈஷாவில்‌ மார்ச்‌ 1ம்‌ தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி மறுநாள்‌ காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. சிவனின்‌ அருள்‌ நிறைந்த இரவு என அழைக்கப்படும்‌ மஹாசிவராத்திரி அன்று மக்களை இரவு முழுவதும்‌ விழிப்பாகவும்‌, விழிப்புணர்வாகவும்‌ வைத்திருப்பதற்காக இத்தகைய இசை மற்றும்‌ நடன நிகழ்ச்சிகள்‌ நடத்தப்பட்டு வருகிறது.

இவ்விழா தமிழ்‌, தெலுங்கு, கன்னடம்‌, இந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில்‌ முன்னணி தொலைக்காட்சிகள்‌ மற்றும்‌ யூ- டூயூப்‌ சேனல்களில்‌ நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மக்கள்‌ தங்கள்‌ இல்லங்களில்‌ பாதுகாப்பாக இருந்தபடியே நேரலையில்‌ பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்‌.

கடந்தாண்டு ஈஷா மஹாசிவராத்திரியின்‌ நேரலை உலக அளவில்‌ புகழ்பெற்ற கிராமி விருது வழங்கும்‌ விழாவையே முந்தி அதிக பார்வைகளைப் பெற்று உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...