திமுகவினர் போத்தனூர் காவல்நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர். அதே சமயம் திமுகவினரைக் கண்டித்து அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி போராட்டம் மேற்கொண்டனர்.
கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100-வது வார்டில் திமுகவினர் பரிசு பொருளும், பணமும் பட்டுவாடா செய்வதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், அதிமுக வேட்பாளர் வேணுகோபால் மற்றும் அதிமுக தொண்டர்கள் மற்றும் திமுகவினர் கடுமையாக மோதிக்கொண்டனர்.
இதில், அதிமுகவைச் சேர்ந்த சிலருக்குப் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. கத்தி குத்து அடைந்த சரவணன் என்பவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மோதலில், 2-திமுகவினரும் காயம் அடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக வேட்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் போத்தனூர் காவல்நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர்.

அதே சமயம் அப்பகுதியில் திமுகவினரைக் கண்டித்து அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி போராட்டம் மேற்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதில், அதிமுகவைச் சேர்ந்த சிலருக்குப் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. கத்தி குத்து அடைந்த சரவணன் என்பவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மோதலில், 2-திமுகவினரும் காயம் அடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக வேட்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் போத்தனூர் காவல்நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர்.
அதே சமயம் அப்பகுதியில் திமுகவினரைக் கண்டித்து அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி போராட்டம் மேற்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.