கோவை 100-வது வார்டில் திமுக -அதிமுக இடையே கடும் மோதல்..! மாறி மாறி இரு கட்சியினரும் போராட்டம்

திமுகவினர் போத்தனூர் காவல்நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர். அதே சமயம் திமுகவினரைக் கண்டித்து அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி போராட்டம் மேற்கொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100-வது வார்டில் திமுகவினர் பரிசு பொருளும், பணமும் பட்டுவாடா செய்வதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், அதிமுக வேட்பாளர் வேணுகோபால் மற்றும் அதிமுக தொண்டர்கள் மற்றும் திமுகவினர் கடுமையாக மோதிக்கொண்டனர்.

இதில், அதிமுகவைச் சேர்ந்த சிலருக்குப் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. கத்தி குத்து அடைந்த சரவணன் என்பவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மோதலில், 2-திமுகவினரும் காயம் அடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்நிலையில், திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக வேட்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் போத்தனூர் காவல்நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர்.



அதே சமயம் அப்பகுதியில் திமுகவினரைக் கண்டித்து அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி போராட்டம் மேற்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...