பொள்ளாச்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள 89-வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு செல்லப்பட்டது. இந்த தேர்தலில் 428-தேர்தல் அலுவலர்களும், பாதுகாப்புப் பணிக்கு 250-போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள 89-வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு செல்லப்பட்டது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36-வார்டுகளில் மொத்தம் 151-பேர் போட்டியிடுகின்றனர்.

36-வார்டுகளில் மொத்தம் 89-வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள 89-வாக்குச்சாவடிகளுக்கு 89-மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், மற்றும் அவசரத் தேவைக்குக் கூடுதலாக 18-எந்திரங்கள் என மொத்தம் 107-வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி இன்று பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் மண்டல அலுவலர் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தலுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் டெம்போ வேனில் ஏற்றப்பட்டுப் பாதுகாப்பாக அந்தந்த வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 89-வார்டுகளில் 49-வார்டுகள் பதட்டமான வாக்குச்சாவடி என அறிவிக்கப்பட்டு அந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த தேர்தலில் 428-தேர்தல் அலுவலர்களும், பாதுகாப்புப் பணிக்கு 250-போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...