கோவை கோட்டைமேடு பகுதியில் நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் திமுக மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் இடையே நடந்த மோதலில் எஸ்டிபிஐயினர் 9-பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை கோட்டைமேடு பகுதியில் நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் திமுக மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் இடையே நடந்த மோதலில் எஸ்டிபிஐயினர் 9-பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி தேர்தலில் 82-வது வார்டு, கோட்டைமேடு பகுதியில் திமுக சார்பில் முபஷீரா மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ரஷீதா பேகம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், நேற்று நடந்த பிரச்சாரத்தில் மோதல் ஏற்பட்டது.
அதனைக் குறித்து எஸ்டிபிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், நேற்று மாலை 4-5 மணி வரை பிரச்சாரம் நடந்த கோட்டைமேடு போலிஸாரிடம் எஸ்டிபிஐயினர் முன்னதாகவே அனுமதி பெற்று நேற்று கோட்டைமேடு பெருமாள் கோவில் வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாலை 4.15-க்கு எஸ்டிபிஐ சார்பில் பிரச்சாரம் நடத்தியதாகவும், அப்போது திமுகவினர் எஸ்.டி.பி.ஐ பிரச்சாரம் நடத்தும் தெருக்கு வந்ததாகவும், அப்பொழுது அங்கு கோஷங்களுடன் வந்த திமுகவினர் வேண்டும் என்றே எஸ்.டி.பி.ஐயிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
திமுகவினர் மாலை 5-6 மணி வரை பிரச்சாரம் நடத்தவே அனுமதிப் பெற்றதாகவும் ஆனால் அவர்களுக்கு ஒதுக்கிய நேரத்திற்கு முன்னதகவே திமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டதாக எஸ்டிபிஐ குற்றம்சாட்டினர். மேலும், திமுகவின் பிரசாரத்தில் பங்கேற்ற சில நபர்கள் வேண்டும் என்றே எஸ்டிபிஐ நபர்களை நோக்கித் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதில் எஸ்.டி.பி.ஐ சார்ந்த 9 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதனைக் குறித்து திமுக நிர்வாகி கூறுகையில், திமுக 3-மணி முதல் 6-மணி வரை பிரச்சாரம் நடந்த அனுமதி பெற்றதாக கூறிய அவர், திமுகவின் வேட்பாளர் வாகனம் மற்றும் பிரச்சாரத்தில் ஈட்டுப்பட்ட தொண்டர்கள் எஸ்டிபிஐ பிரச்சாரம் நடத்தும் கூட்டத்தினை கடக்கும் பொழுது கோஷங்களை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், எஸ்டிபிஐயினர் நீங்கள் ஊழல் ஆட்சி நடத்துகிறீர்கள். திமுகவினர் ரத்தம் பார்க்காமல் போக மாட்டார்கள் என்று வேண்டும் என்றே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதே சமயத்தில் எஸ்டிபிஐயினர் அவர்கள் கையில் வைத்திருந்த கொடிகுச்சியினை கொண்டு திமுகவினரைத் தாக்கியதில் காயங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என தெரிவித்தார். மேலும், தாக்குதல் நடத்திய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி தேர்தலில் 82-வது வார்டு, கோட்டைமேடு பகுதியில் திமுக சார்பில் முபஷீரா மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ரஷீதா பேகம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், நேற்று நடந்த பிரச்சாரத்தில் மோதல் ஏற்பட்டது.
அதனைக் குறித்து எஸ்டிபிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், நேற்று மாலை 4-5 மணி வரை பிரச்சாரம் நடந்த கோட்டைமேடு போலிஸாரிடம் எஸ்டிபிஐயினர் முன்னதாகவே அனுமதி பெற்று நேற்று கோட்டைமேடு பெருமாள் கோவில் வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாலை 4.15-க்கு எஸ்டிபிஐ சார்பில் பிரச்சாரம் நடத்தியதாகவும், அப்போது திமுகவினர் எஸ்.டி.பி.ஐ பிரச்சாரம் நடத்தும் தெருக்கு வந்ததாகவும், அப்பொழுது அங்கு கோஷங்களுடன் வந்த திமுகவினர் வேண்டும் என்றே எஸ்.டி.பி.ஐயிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
திமுகவினர் மாலை 5-6 மணி வரை பிரச்சாரம் நடத்தவே அனுமதிப் பெற்றதாகவும் ஆனால் அவர்களுக்கு ஒதுக்கிய நேரத்திற்கு முன்னதகவே திமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டதாக எஸ்டிபிஐ குற்றம்சாட்டினர். மேலும், திமுகவின் பிரசாரத்தில் பங்கேற்ற சில நபர்கள் வேண்டும் என்றே எஸ்டிபிஐ நபர்களை நோக்கித் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதில் எஸ்.டி.பி.ஐ சார்ந்த 9 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதனைக் குறித்து திமுக நிர்வாகி கூறுகையில், திமுக 3-மணி முதல் 6-மணி வரை பிரச்சாரம் நடந்த அனுமதி பெற்றதாக கூறிய அவர், திமுகவின் வேட்பாளர் வாகனம் மற்றும் பிரச்சாரத்தில் ஈட்டுப்பட்ட தொண்டர்கள் எஸ்டிபிஐ பிரச்சாரம் நடத்தும் கூட்டத்தினை கடக்கும் பொழுது கோஷங்களை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், எஸ்டிபிஐயினர் நீங்கள் ஊழல் ஆட்சி நடத்துகிறீர்கள். திமுகவினர் ரத்தம் பார்க்காமல் போக மாட்டார்கள் என்று வேண்டும் என்றே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதே சமயத்தில் எஸ்டிபிஐயினர் அவர்கள் கையில் வைத்திருந்த கொடிகுச்சியினை கொண்டு திமுகவினரைத் தாக்கியதில் காயங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என தெரிவித்தார். மேலும், தாக்குதல் நடத்திய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.