பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வந்ததால், காவல்துறையினர் 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கோவை: திமுகவினரை கண்டித்து இன்று காலை முதல் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களிடம், மாவட்ட ஆட்சியர் சமீரன் பேச்சுவார்த்தை நடத்தியும், காவல்துறையினர் பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டமானது தொடரப்பட்ட நிலையில், அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வந்ததால், காவல்துறையினர் 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் காவல்துறையினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
தற்போது, கைது செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ க்கள் அனைவரும் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.