கேரளா மற்றும் அதையொட்டிய பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
கோவை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கேரளா மற்றும் அதையொட்டிய பகுதியில், கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் கடலோர மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னையில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை மற்றும் நாளை மறுநாளில், தென் மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில், மிதமான மழை பெய்யும்.
வரும் 21ம் தேதி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கேரளா மற்றும் அதையொட்டிய பகுதியில், கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் கடலோர மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னையில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை மற்றும் நாளை மறுநாளில், தென் மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில், மிதமான மழை பெய்யும்.
வரும் 21ம் தேதி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.