கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை: கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.
வருகிற 19-ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளில் அதிமுக சார்பில் 15 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவான எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் பேசிய எஸ்.பி வேலுமணி கடந்த அதிமுக ஆட்சியில் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருப்பதாகவும், எனவே கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன், கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வருகிற 19-ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளில் அதிமுக சார்பில் 15 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவான எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தில் பேசிய எஸ்.பி வேலுமணி கடந்த அதிமுக ஆட்சியில் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருப்பதாகவும், எனவே கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன், கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.