பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த 19 வயது வாலிபர் கைது

பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டு, போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை சிறையில் அடைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டு, போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி காணவில்லை என்று கடந்த 7ம் தேதியன்று அவரது பெற்றோர்கள் ஆனைமலை போலீசில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன சிறுமியைத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காணாமல் போன சிறுமி ஈரோடு அருகே உள்ள அந்தியூர் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பின்னர் அங்கு சென்ற போலீசார், சிறுமியை மீட்டு விசாரணை செய்ததில், ஆனைமலையில் தனியார் ஹோட்டலில் பணியாற்றும் ஆனந்த் குமார்(19) என்பவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருந்தது.

மேலும், அவர் கடந்த 7 ஆம் தேதி சிறுமியை அழைத்துச் சென்று பல்லடம் அருகே உள்ள ஒரு கோயிலில் வைத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியை மீட்ட போலீசார் ஆனந்த் குமார் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை சிறையில் அடைத்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...