இதில் காய்கறிப் பயிர்கள் 8 ரகங்கள், 4 விவசாய தொழில்நுட்பங்கள், 5 பண்ணை இயந்திரங்கள் ஆகியவை அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் 17 புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆண்டுதோறும் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அதன்படி நடப்பாண்டில் கோ 51, நெல் ஏடி 57, நெல் டிகேஎம் 15,- நெல் டிஆர்ஒய் 5, உளுந்து ஏடி 7, பச்சைப்பயறு லம்பன 5, நிலக்கடலை விஆர் ஜ 9, மற்றும் விஆர் ஐ 10, கரும்பு கோஜி 7, வாழை கோ 3 , பலா பி கே எம் 1. நாவல் பிகேஎம் 1, கத்தரி எம்டியூ 2. அவரை கோ 15, சேனைக்கிழங்கு கோ1. மஞ்சள் பிஆர்எஸ் 3, கொத்தமல்லி கோ 5 ஆகிய 17 புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் வேளாண் பயிர்கள் ஒன்பது கிரகங்கள் தோட்டக்கலை மற்றும் காய்கறிப் பயிர்கள் 8 ரகங்கள், 4 விவசாய தொழில்நுட்பங்கள், 5 பண்ணை இயந்திரங்கள் ஆகியவை அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக துணைவேந்தர் பொறுப்பு கிருஷ்ணமூர்த்தி கூறும்போது:-
பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 100 வருடங்களில் 865 கிரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ரகங்களை பயிரிட்டு விவசாயிகள் நன்மை பெற வேண்டும் என்று தெரிவித்தார்.