திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வது வார்டு மறு வரையறை செய்யப்பட்டதில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி மாநகராட்சி ஆணையரை பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் :திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வது வார்டு மறு வரையறை செய்யப்பட்டதில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி மாநகராட்சி ஆணையரைபொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 வார்டுகள் விரிவாக்கம் செய்யப்பட்டு மறு வரையறை செய்யப்பட்டது. இதில் வார்டு எல்லை பகுதிகள் முறையாக பிரிக்கப்படாமல் குளறுபடி நடைபெற்று உள்ளதாகவும் குறிப்பாக 48 வது வார்டுக்கு உட்பட்ட முல்லை நகர், எம்.ஆர்.ஜி நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை 47 வது மற்றும் 48 வது வார்டு என பிரித்து மறு வரையறை செய்துள்ளதாகவும் மேலும் ஒரே வீட்டை சேர்ந்தவர்களுக்கு இருவேறு கவுன்சிலர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது.
இதனால் தங்கள் பிரச்சனைகளுக்கு எந்த கவுன்சிலரை அணுகுவது என குழப்பம் நிலவுவதாகவும் பொதுமக்கள் மற்றும் 48 வது வார்டு வேட்பாளர்கள் நல்லூர் மண்டல அலுவலகத்திற்குஆய்வு பணிகளை மேற்கொள்ள சென்ற மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடியைமுற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மறு வரையறை குளறுபடி குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 வார்டுகள் விரிவாக்கம் செய்யப்பட்டு மறு வரையறை செய்யப்பட்டது. இதில் வார்டு எல்லை பகுதிகள் முறையாக பிரிக்கப்படாமல் குளறுபடி நடைபெற்று உள்ளதாகவும் குறிப்பாக 48 வது வார்டுக்கு உட்பட்ட முல்லை நகர், எம்.ஆர்.ஜி நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை 47 வது மற்றும் 48 வது வார்டு என பிரித்து மறு வரையறை செய்துள்ளதாகவும் மேலும் ஒரே வீட்டை சேர்ந்தவர்களுக்கு இருவேறு கவுன்சிலர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது.
இதனால் தங்கள் பிரச்சனைகளுக்கு எந்த கவுன்சிலரை அணுகுவது என குழப்பம் நிலவுவதாகவும் பொதுமக்கள் மற்றும் 48 வது வார்டு வேட்பாளர்கள் நல்லூர் மண்டல அலுவலகத்திற்குஆய்வு பணிகளை மேற்கொள்ள சென்ற மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடியைமுற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மறு வரையறை குளறுபடி குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.