கோவை உள்ளாட்சி தேர்தல் 2022: கூட்டணி கட்சிகள் வார்டு ஒதுக்கீட்டை வெளியிட்டது திமுக...!

காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி வார்டு ஒதுக்கீடு குறித்து தகவல் எதுவும் இல்லாத நிலையில், இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கோவை: கோவை மாநகராட்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுக கூட்டணி வார்டு ஒதுக்கீடு இன்று வெளியிடப்பட்டது. வரும் 19 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர் பட்டியலை இன்னும் வெளியிடாதது கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

நேற்று, பாஜக மற்றும் அதிமுகவின் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி முறிந்ததையடுத்து, பாஜக தனித்துப் போட்டியிடும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார். இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்ய மூன்று நாட்களே உள்ள நிலையில், திமுக தன் கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு வார்டு ஒதுக்கீடு செய்யும் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையை திமுக கோட்டைவிட்ட காரணத்தினால், கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், யாருக்கு சீட் வழங்குவது? வெற்றிக்குக் கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு குறித்து தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதற்கட்டமாக, கூட்டணி கட்சிகளுக்கான ஒதுக்கீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கோவை மாநகராட்சியில் உள்ள மொத்தம் 100 வார்டுகளில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான்கு வார்டுகள், மதிமுகவிற்கு முன்று வார்டுகள், கொங்குநாடு மக்கள் கட்சிக்கு இரண்டு வார்டுகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு வார்டு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி மற்றும் இட ஒதுக்கீடு குறித்து தகவல் எதுவும் இல்லாத நிலையில், இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்னும் சற்று நேரத்தில், காங்கிரஸ் கூட்டணிக்கான வார்டுகள் அறிவிக்கப்படும் என்றும், 7 முதல் 9 வார்டுகள் வரை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...