கோவையில் குழந்தை தொழிலாளர்கள் இருவர் மீட்பு..!

தெலுங்கு பாளையம் அருகே உள்ள ஸ்வீட் கடையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்கப்பட்டனர்.


கோவை: கோவையில் குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

கோவையில் பெரிய வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறி பணிக்கு அமர்த்தினால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், கோவை தெலுங்கு பாளையம் ராஜேஸ்வரி நகரில் உள்ள ஸ்வீட் கடையில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதாக தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர் திட்ட அதிகாரி அலெக்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையை சோதனை செய்தனர்.

அப்போது, 9 மற்றும் 11 வயதுடைய சிறுவர்கள் 2 பேரை ஸ்வீட் கடையில் பணிக்கு அமர்த்தி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து செல்வபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில், சிறுவர்களை பணிக்கு அமர்த்திய ஸ்வீட் கடை உரிமையாளர்கள் செல்வபுரம் தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்த தவசி அப்பன் அடைக்கலம் (31) செல்வபுரம் சொக்கம்புதூர் சேர்ந்த கண்ணன் (42), ஆகிய 2 பேர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர், குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்கப்பட்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...