காலை மற்றும் மாலை நேரங்களில் அதே பகுதியில் உலா வருவதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரயில் பாதையில் பிறந்த ஒரு மாத குட்டியுடன் காட்டுயானை முகாமிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை இரயில் பாதையில் ஹில் குரோ ரன்னிமேடு ரயில் நிலையம் இடையே பிறந்து ஒரு மாதம் ஆன குட்டியுடன் யானை கடந்த ஒரு மாத காலமாக முகாமிட்டுள்ளது.
அவ்வப்போது மலை ரயில் பாதையில் உலா வந்து, மலை ரயில் எஞ்சினுக்கு ஊற்றக் கூடிய நீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி வருகிறது.
குட்டியுடன் உள்ளதால் வேறு பகுதிக்கு செல்ல முடியாமல் அதே பகுதியில் முகாமிட்டுள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் அதே பகுதியில் உலா வருவதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மலைப்பாதையில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விபத்து அபாயம் கருதி பாதுகாப்பான வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை இரயில் பாதையில் ஹில் குரோ ரன்னிமேடு ரயில் நிலையம் இடையே பிறந்து ஒரு மாதம் ஆன குட்டியுடன் யானை கடந்த ஒரு மாத காலமாக முகாமிட்டுள்ளது.
அவ்வப்போது மலை ரயில் பாதையில் உலா வந்து, மலை ரயில் எஞ்சினுக்கு ஊற்றக் கூடிய நீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி வருகிறது.
குட்டியுடன் உள்ளதால் வேறு பகுதிக்கு செல்ல முடியாமல் அதே பகுதியில் முகாமிட்டுள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் அதே பகுதியில் உலா வருவதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மலைப்பாதையில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விபத்து அபாயம் கருதி பாதுகாப்பான வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.