சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் ‘மொபைல் டாய்லெட்டுகள்’


நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கழிப்பறைகளை உபயோகிக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு அரசு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம்  வரை மானியம் கொடுத்துவருகிறது. அதுமட்டுமின்றி நகரப்பகுதிகளில் ஆங்காங்கே ரெடிமேட் கழிப்பறைகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டது. அந்த கழிப்பறைகளுக்கு ‘நம்ம டாய்லெட்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

முறையான பராமரிப்பில்லாத காரணத்தால் கோவையின் பல இடங்களில் வைக்க்கப்பட்டிருந்த நம்ம டாய்லெட் பாழடைந்து போனது. மக்கள் அதிகமாக திரளும் இடங்களில் நம்ம டாய்லெட்டுகள் வைக்கப்பட்டதால், செயல்பாடாமல் இருந்தாலும் சரி என்றெண்ணிய நம்மவர்கள் அதில் சிறுநீர்  கழித்து வந்தனர். சுத்தப்படுத்தப்படாத நிலையில் நம்ம டாய்லெட்டுகள் மீண்டும் மீண்டும் உபயோகிக்கப்பட, சுகாதாரத்தை பேணும் விதமாக அமைக்கப்பட்ட நம்ம டாய்லெட்டுகளே அதற்கு எமனாக அமைந்துள்ளன.



கோவை அரசு மருத்துவமனையில் இருந்து அரசு கலைக்கல்லூரி செல்லும் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு மொபைல் டாய்லெட் மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டது. ‘நோ பார்க்கிங்’ என்ற காவல்துறையின் அறிவிப்பு பதாகைகள் இருந்தும் சாலையின் இருபுறமும் நிற்கும் வாகனங்கள் நடுவே அந்த மொபைல் டாய்லெட்டை அமைப்பதில் சிரமம் ஏற்படவே மக்கள் நடக்கும் நடை பாதையில் அதை அமைத்தனர்.

அவசரத்திற்கு உதவும் என்று நினைத்த மக்களுக்கு தற்போது தொற்றுநோய் பீதியை கிளப்பும் விதமாக உள்ளது இந்த மொபைல் டாய்லெட். முன்னதாக கூறியதுபோல் பராமரிப்பில்லாத சூழலில் மீண்டும் மீண்டும் உபயோகிக்கப்பட்டது. இதன் விளைவாக கடந்த சில நாட்களாக அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீச துவங்க, அப்பகுதியை கடந்து செல்ல முற்படும் பொதுமக்கள் ‘கப்-சிப்’ என்று மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர்.



சுகாதார சீர்கேடுகள் தொடர்பாக ஊடகங்கள் பலமுறை செய்திவெளியிட்டுள்ளன. ஆனால், ஒரு சில அதிகாரிகள் தவிர மற்ற அனைவரும் செய்திகளுக்கு செவி சாய்ப்பதில்லை. 

இந்த மோசமான மொபைல் டாய்லெட் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரி ஒருவரை "சிம்ப்ளிசிட்டி" குழுவினர் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால், ஊடகம் என்ற ஒற்றை வார்த்தையில் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் இது போன்ற பிரச்சனைகளில் சம்பந்தபட்ட அதிகாரிகள் மும்முரம் காட்ட வேண்டும் என்றும், செயல்படாத அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...