நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கோவை வேட்பாளர்களை அறிவித்த எஸ்.டி.பி.ஐ கட்சி..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடத்தப்பட உள்ள நிலையில், முதல் கட்டமாக 8 வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது.



கோவை: கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எஸ்.டி. பி.ஐ கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எஸ்டிபிஐ கட்சி கோவை மாநகரில் போட்டியிடக் கூடிய வார்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.



முதல் கட்டமாக 8 வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது. அதன்படி 77- பர்சானா, 78- சைபுநிசா, 79- அஸ்மா, 82- ரஷீதா பேகம், 84- அலீமா, 86- முஸ்தபா, 87- சிவக்குமார், 95- முஹம்மது சலீம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி கோட்டைமேடு பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன் கூறுகையில்,



தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் எஸ்டிபிஐ கட்சி போட்டியிடுகிறது. கோவையில் முதல் கட்டமாக 8 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். இனி அடுத்தடுத்த வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.

நாங்கள் தணித்து களம் காண்கிறோம். நேர்மையான உள்ளாட்சி என்பதே எங்களின் தேர்தல் வாக்குறுதி. அமமுக கூட்டணி குறித்து தற்போது வரை பேச்சுவார்த்தை இல்லை. முந்தைய ஆட்சியிலும் சரி, தற்போதைய ஆட்சியிலும் சரி இஸ்லாமிய மக்கள் வசிக்கும் இடங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.



கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லை. எஸ்டிபிஐ கட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...