கிணத்துக்கடவு அருகே தாமரைக் குளத்தில் டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே தாமரைக் குளத்தில் டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.
கோவை இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் மாலிக்கராஜ்(23) இவரது நண்பர் புலியகுளம் பகுதியை சேர்ந்த கைலாஷ்(23) என்பவரைத் தனது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர வைத்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கிணத்துக்கடவு அடுத்துள்ள தாமரைகுளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற டிப்பர் லாரி ஒன்று திடீரென வலதுபுறமாகத் திரும்பியது. இதனால் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மாலிக்ராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் டிப்பர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் மாலிக்ராஜ், கைலாஷ் ஆகிய இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் மாலிக்கராஜ்(23) இவரது நண்பர் புலியகுளம் பகுதியை சேர்ந்த கைலாஷ்(23) என்பவரைத் தனது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர வைத்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கிணத்துக்கடவு அடுத்துள்ள தாமரைகுளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற டிப்பர் லாரி ஒன்று திடீரென வலதுபுறமாகத் திரும்பியது. இதனால் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மாலிக்ராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் டிப்பர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் மாலிக்ராஜ், கைலாஷ் ஆகிய இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.