கோவையில் பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் மூலம் 11.29 கோடி வருமானம்..!

கடந்த ஆண்டு இதே எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகள் இயக்கிய போது ரூ.11.68 வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 39 லட்சம் குறைவாகும்.


கோவை: கோவையில் பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் மூலம் 11.29 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டைவிட 39 லட்சம் குறைவாகும்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் ஊருக்கு செல்வதற்கும், பண்டிகை முடிந்து திரும்புவதற்கு 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் என மொத்தம் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் கோவை சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இவை திருப்பூர், மதுரை, தேனி, பழனி, திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கோவையிலிருந்து சென்றது.

இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.11.29 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டு இதே எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகள் இயக்கிய போது ரூ.11.68 வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 39 லட்சம் குறைந்தது.

இதுகுறித்து கோவை கோட்டம் அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த பேருந்துகள் கடந்த ஆண்டு 45 லட்சம் கிலோ மீட்டர் சென்று வந்தது. இந்த ஆண்டு 49 லட்சம் சென்றுள்ளது. கொரோனா சூழ்நிலை காரணமாக பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர் செல்வதை தவிர்த்து இங்கேயே பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள். சிறப்பு பேருந்துகள் இயக்கியதில் ரூ.11.29 வருவாய் கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...