மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மகேஸ்வரன், பைசல் ஆகியோரை கிணத்துக்கடவு போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே காந்திநகரில் ஐ.டி அதிகாரி போல் நடித்து பணம் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி மேத்யூ நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே காந்திநகரை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் பஞ்சலிங்கம். இவருடைய வீட்டிற்கு கடந்த 15ம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் என்றுகூறி வீட்டில் இருந்து ரூ.15 லட்சம், உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்குபதிவு செய்து இதற்கு முக்கிய காரணமாக இருந்த சதீஷ் (36), ஆனந்த் ,(47), ராமசாமி(47), தியாகராஜன் (42), பிரவீன்குமார் ( 36) மோகன்குமார் (30), மணிகண்டன் (37) ஆகிய 7 பேரை கிணத்துக்கடவு போலீசார் முதல்கட்டமாக கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
இதில் பஞ்சலிங்கம் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரி வேடம்போட்டு சென்ற முக்கிய குற்றவாளியான கோவையை சேர்ந்த மேத்யூ, காரணம்பேட்டை மகேஸ்வரன், கவுண்டம்பாளையம் பைசல் ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கோவை ரத்தினபுரி மேத்யூ வயது (60) நேற்று பொள்ளாச்சி ஜெ.எம்.2 நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

நீதிமன்றத்தில் சரணடைந்த மேத்யூவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். முக்கிய குற்றவாளியான மேத்யூ நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளதால் கிணத்துக்கடவு போலீசார் மேத்யூவை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மகேஸ்வரன், பைசல் ஆகியோரை கிணத்துக்கடவு போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே காந்திநகரை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் பஞ்சலிங்கம். இவருடைய வீட்டிற்கு கடந்த 15ம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் என்றுகூறி வீட்டில் இருந்து ரூ.15 லட்சம், உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்குபதிவு செய்து இதற்கு முக்கிய காரணமாக இருந்த சதீஷ் (36), ஆனந்த் ,(47), ராமசாமி(47), தியாகராஜன் (42), பிரவீன்குமார் ( 36) மோகன்குமார் (30), மணிகண்டன் (37) ஆகிய 7 பேரை கிணத்துக்கடவு போலீசார் முதல்கட்டமாக கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
இதில் பஞ்சலிங்கம் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரி வேடம்போட்டு சென்ற முக்கிய குற்றவாளியான கோவையை சேர்ந்த மேத்யூ, காரணம்பேட்டை மகேஸ்வரன், கவுண்டம்பாளையம் பைசல் ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கோவை ரத்தினபுரி மேத்யூ வயது (60) நேற்று பொள்ளாச்சி ஜெ.எம்.2 நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
நீதிமன்றத்தில் சரணடைந்த மேத்யூவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். முக்கிய குற்றவாளியான மேத்யூ நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளதால் கிணத்துக்கடவு போலீசார் மேத்யூவை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மகேஸ்வரன், பைசல் ஆகியோரை கிணத்துக்கடவு போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.