கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக உள்ளூர் மக்கள் மட்டுமே இந்தக் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


கோவை: கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது.

கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் பகுதியில் பழமைவாய்ந்த கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த சில வருடங்களாக நடைபெற்றுவந்த திருப்பணிகள் முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. நான்கு காலையாகப் பூஜைகள் நடத்தப்பட்டு முக்கிய நிகழ்வான குடமுழுக்கு விழா நடைபெற்றது.



யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் தீர்த்த குடங்களை பட்டாச்சாரியார்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோபுர உச்சியில் உள்ள கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தினர்.

இதையடுத்து கரிவரதராஜ பெருமாளுக்குச் சிறப்பு அலங்காரம் செய்து சிறப்புப் பூஜை நடைபெற்றது.

மேலும் கும்பாபிஷேக விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக உள்ளூர் மக்கள் மட்டுமே இந்தக் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...