கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக உள்ளூர் மக்கள் மட்டுமே இந்தக் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
கோவை: கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது.
கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் பகுதியில் பழமைவாய்ந்த கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த சில வருடங்களாக நடைபெற்றுவந்த திருப்பணிகள் முடிவடைந்துள்ளது.
இதனையடுத்து இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. நான்கு காலையாகப் பூஜைகள் நடத்தப்பட்டு முக்கிய நிகழ்வான குடமுழுக்கு விழா நடைபெற்றது.

யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் தீர்த்த குடங்களை பட்டாச்சாரியார்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோபுர உச்சியில் உள்ள கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தினர்.
இதையடுத்து கரிவரதராஜ பெருமாளுக்குச் சிறப்பு அலங்காரம் செய்து சிறப்புப் பூஜை நடைபெற்றது.
மேலும் கும்பாபிஷேக விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக உள்ளூர் மக்கள் மட்டுமே இந்தக் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் பகுதியில் பழமைவாய்ந்த கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த சில வருடங்களாக நடைபெற்றுவந்த திருப்பணிகள் முடிவடைந்துள்ளது.
இதனையடுத்து இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. நான்கு காலையாகப் பூஜைகள் நடத்தப்பட்டு முக்கிய நிகழ்வான குடமுழுக்கு விழா நடைபெற்றது.
யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் தீர்த்த குடங்களை பட்டாச்சாரியார்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோபுர உச்சியில் உள்ள கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தினர்.
இதையடுத்து கரிவரதராஜ பெருமாளுக்குச் சிறப்பு அலங்காரம் செய்து சிறப்புப் பூஜை நடைபெற்றது.
மேலும் கும்பாபிஷேக விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக உள்ளூர் மக்கள் மட்டுமே இந்தக் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.