குடோனில் பதுங்கிய சிறுத்தை 3 முறை கூண்டின் அருகே வந்து சென்றதாகவும், ஆரோக்கியமாக உள்ளதாகவும், அதிகாலை நேரத்தில் மட்டுமே சிறுத்தை உலா வருவதாகவும் பகலில் ஓய்வெடுப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: குடோனில் பதுங்கிய சிறுத்தை 3 முறை கூண்டின் அருகே வந்து சென்றதாகவும், ஆரோக்கியமாக உள்ளதாகவும், அதிகாலை நேரத்தில் மட்டுமே சிறுத்தை உலா வருவதாகவும் பகலில் ஓய்வெடுப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள குடோனில் மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை கடந்த 17-ந் தேதி பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த குடோன் இரண்டு வாயில்களிலும் கூண்டுகள் வைத்து 6 கேமராக்கள் மூலமாகக் கண்காணித்து சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தொடர்ந்து 5-வது நாளாகக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் இன்று அதிகாலையில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சி வெளியிட்டனர்.
மூன்று முறை சிறுத்தை கூண்டில் மிக அருகில் வந்து சென்றுள்ளது. ஆனால் கூண்டுக்குள் செல்லவில்லை. அதிகாலை நேரத்தில் மட்டுமே சிறுத்தை உலா வருவதாகவும் பகலில் ஓய்வெடுப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறுத்தைப்புலி மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள குடோனில் மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை கடந்த 17-ந் தேதி பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த குடோன் இரண்டு வாயில்களிலும் கூண்டுகள் வைத்து 6 கேமராக்கள் மூலமாகக் கண்காணித்து சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தொடர்ந்து 5-வது நாளாகக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் இன்று அதிகாலையில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சி வெளியிட்டனர்.
மூன்று முறை சிறுத்தை கூண்டில் மிக அருகில் வந்து சென்றுள்ளது. ஆனால் கூண்டுக்குள் செல்லவில்லை. அதிகாலை நேரத்தில் மட்டுமே சிறுத்தை உலா வருவதாகவும் பகலில் ஓய்வெடுப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறுத்தைப்புலி மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.