கோவை இராமநாதபுரம் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் மேல் நிலை நீர் தொட்டி கட்டுவது குறித்து பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை இராமநாதபுரம் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் மேல் நிலை நீர் தொட்டி கட்டுவது குறித்து பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அதில் உள்ள சிக்கல்களை அரசு அதிகாரிகளுடன் பள்ளிக்குச் சென்று பொது மக்களிடம் கேட்டறிந்தார்.
கோவை ராமநாதபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் மேற்கொண்டு வரும் நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் பணி துவங்கியதை அடுத்துத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இப் பணிகளை மேற்கொள்ளும் போது அந்தப் பள்ளியிலிருந்த பல்வேறு மரங்களை வேரோடு வெட்டி சாய்த்து உள்ளார்கள். தொட்டி அமைப்பதன் மூலம் பள்ளி மைதானம் பெரிய அளவில் பாதிப்பு அடைகிறது.
இதனால் மாணவர்களின் விளையாட்டுத் திறமை பாதிப்புக்குள்ளாகிறது. எனவே மாநகராட்சி தண்ணீர் தொட்டியை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆய்வின் போது பா.ஜ.க வின் மாவட்டச் செயலாளர் கவிதராஜன், தொழில் அணியின் மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார், பிரச்சார அணியின் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அதில் உள்ள சிக்கல்களை அரசு அதிகாரிகளுடன் பள்ளிக்குச் சென்று பொது மக்களிடம் கேட்டறிந்தார்.
கோவை ராமநாதபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் மேற்கொண்டு வரும் நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் பணி துவங்கியதை அடுத்துத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இப் பணிகளை மேற்கொள்ளும் போது அந்தப் பள்ளியிலிருந்த பல்வேறு மரங்களை வேரோடு வெட்டி சாய்த்து உள்ளார்கள். தொட்டி அமைப்பதன் மூலம் பள்ளி மைதானம் பெரிய அளவில் பாதிப்பு அடைகிறது.
இதனால் மாணவர்களின் விளையாட்டுத் திறமை பாதிப்புக்குள்ளாகிறது. எனவே மாநகராட்சி தண்ணீர் தொட்டியை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆய்வின் போது பா.ஜ.க வின் மாவட்டச் செயலாளர் கவிதராஜன், தொழில் அணியின் மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார், பிரச்சார அணியின் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.