கோவை வனச்சரக பகுதிகளில் மரணமடைந்த உயிரினங்களின் பாகங்கள் தீயிட்டு எரிப்பு

வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் கோவை வனச்சரக பகுதிகளில் மரணமடைந்த உயிரினங்களின் 600-க்கும் மேற்பட்ட எலும்புகள், நகங்கள், பற்கள் என அனைத்தும் இன்று தீயிட்டு எரிக்கப்பட்டது.


கோவை: வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் கோவை வனச்சரக பகுதிகளில் மரணமடைந்த உயிரினங்களின் எலும்புகள், நகங்கள், பற்கள் என அனைத்தும் இன்று தீயிட்டு எரிக்கப்பட்டது.

கோவை வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் கோவை வனச்சரக பகுதிகளில் மரணமடைந்த உயிரினங்களின் எலும்புகள், நகங்கள், பற்கள் என அனைத்தும் இன்று தீயிட்டு எரிக்கப்பட்டது.

வன உயிரின சட்டத்தின் கீழ் இறந்த வன உயிரினங்களின், பற்கள், தந்தங்கள் எலும்புகள், நகங்கள் என வன உயிரினங்களின் உடற்பாகங்களை, மனிதர்கள் சேமித்து வைப்பது குற்றம்.

எனவே, இது போன்று சேமிக்கப்படும் பொருட்களை ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் எடுத்து செல்வதும், அவ்வாறு செல்லும் பொழுது பிடிக்கப்பட்டாலோ அது வன உயிரின சட்ட பிரிவில் குற்றம் என்பதால் இது போன்ற குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் வனச்சரக பகுதிகளில் மீட்கப்படும் வன உயிரின பாகங்களை வன அலுவலர்கள் வன ஆர்வலர்கள் முன்னிலையில் அதனை அப்புறப்படுத்துவது வனம் சார்ந்த செயலாக உள்ளது.



இதனடிப்படையில், சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் உத்தரவின்படி, கோவை உட்பட 7 வனச்சரக பகுதிகளான பெரிய நாயக்கன் பாளையம், காரமடை மேட்டுப்பாளையம், சிறுமுகை, மதுக்கரை, போலுவம்பட்டி மற்றும் போன்ற வனப்பகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் ஐந்து வருடங்களாகப் பிடிக்கப்பட்ட மற்றும் கைப்பற்றப்பட்ட பல்வேறு யானைத்தந்தங்கள், புலிநகங்கள், மான்கொம்புகள், மான் தோல், சிறுத்தை பற்கள் என பல்வேறு பொருட்கள் அனைத்தும் கோவை வனச்சரக வன பாதுகாவலர் ராமசுப்ரமணியம் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் வனவிரிவாக்க அலுவலர் தினேஷ் குமார் முன்னிலையில், அவ்வாறு பிடிக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட எலும்புகள், நகங்கள் பற்கள், மான்கொம்புகளை இன்று தீயிட்டு எரிக்கும் பணி நடைபெற்றது.



இதில் ஓசை அமைப்பின் தலைவர் செந்தில் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஜலாலுதின் மற்றும் வன பாதுகாவலர்கள் வன அலுவலர்கள் என பலர் முன்னிலையில் எரிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...