துப்புரவு பணி செய்யும் மூதாட்டியை தாக்கிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
திருப்பூர்: துப்புரவு பணி செய்யும் மூதாட்டியை தாக்கிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக அருக்காணி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 17ம் தேதி அன்று மங்கலம் அடுத்த அக்ரஹாரப்புதூர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் நின்றிருந்த போது அங்கு வந்த திமுகவை சேர்ந்தவரும் அதே பகுதியில் உணவகம் நடத்தி வரும் ஜியாவு என்பவர் மூதாட்டி வளர்த்து வரும் ஆடு வெளியே வருவதாகவும், அதனை பிடித்து பிரியாணி செய்து விடுவேன் என கூறி உள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மது போதையில் இருந்த ஜியாவு மூதாட்டியை திட்டியதுடன் கன்னத்தில் அறைந்தார்.
இதில் மூதாட்டி நிலை தடுமாறி நின்றார். அவரை எச்சரித்து விட்டு ஜியாவு அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார். இந்த சம்பவத்தால் மனமுடைந்த மூதாட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக அருக்காணி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 17ம் தேதி அன்று மங்கலம் அடுத்த அக்ரஹாரப்புதூர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் நின்றிருந்த போது அங்கு வந்த திமுகவை சேர்ந்தவரும் அதே பகுதியில் உணவகம் நடத்தி வரும் ஜியாவு என்பவர் மூதாட்டி வளர்த்து வரும் ஆடு வெளியே வருவதாகவும், அதனை பிடித்து பிரியாணி செய்து விடுவேன் என கூறி உள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மது போதையில் இருந்த ஜியாவு மூதாட்டியை திட்டியதுடன் கன்னத்தில் அறைந்தார்.
இதில் மூதாட்டி நிலை தடுமாறி நின்றார். அவரை எச்சரித்து விட்டு ஜியாவு அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார். இந்த சம்பவத்தால் மனமுடைந்த மூதாட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளார்.