ரேஷன் அரிசியை கடத்தும் வேலையில் ஈடுபட்ட கரும்புக்கடை பள்ளிவாசல் வீதியை சேர்ந்த முகமது உசேனை ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
கோவை: கோவை மாநகர் பகுதியில் தொடர்ந்து ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி வந்தவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை கரும்புக்கடை பள்ளிவாசல் வீதியை சேர்ந்த முகமது உசேன் (42) தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், அவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டப்படி, நடவடிக்கை எடுக்க, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரிந்துரை செய்தனர்.
அதன்படி, முகமது உசேனை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.
கோவை கரும்புக்கடை பள்ளிவாசல் வீதியை சேர்ந்த முகமது உசேன் (42) தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், அவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டப்படி, நடவடிக்கை எடுக்க, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரிந்துரை செய்தனர்.
அதன்படி, முகமது உசேனை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.